இரத்தினபுரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு
காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் குடிநீர், உணவு இன்றி தவிக்கின்றனர்.
இவர்களுக்கு உதவி வழங்க விரும்பும் நன்கொடையானர்கள் இரத்தினபுரி பிரதேச செயலகம் அல்லது இரத்தினபுரி சமூக பொலிஸுக்கு உங்கள் ஆதரவை வழங்குவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசமாக அமையும்.
வெள்ள நிலைமை காரணமாக இரத்தினபுரி பிரதேசத்தின் பல வீதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி பிரதேச செயலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.