பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
மற்றும் மண் சரிவு காரணமாக சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 11 கிராம உத்தியோகத்தர் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை, புவக்பிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் அதே பிரிவு தெரிவித்துள்ளது.
கொஸ்கம தொடக்கம் அவிசாவளை வரையான ஹைலெவல் வீதியின் போக்குவரத்து வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புவக்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.