சீரற்ற காலநிலையினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக ஒதுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.