1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வாதுவ பிரதேசத்தில் நடந்து

சென்ற பெண் ஒருவரிடம் தங்க நகையை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் வாதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணின் நகையை கொள்ளையடிக்கும்போது, ​​குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் சண்டையிட்டுள்ளதுடன் அதன் போது பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து சந்தேக நபரை பிடித்து வாதுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
சந்தேக நபர் வாதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
 
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி