கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் மற்றும் தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை