பாறுக் ஷிஹான்
கட்டட நிர்மாணியின்போது ஏற்பட்ட முரண்பாட்டில்
இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் நகைக்கடை வர்த்தகருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (03) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி, பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் வாதங்களின் அடிப்படையில் சந்தேக நபரான நகைக்கடை உரிமையாளருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
குறித்த வழக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதி வரை நீதிவான் ஒத்திவைத்தார்.