1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசியல் ஒத்துழைப்பை தொடர்பில்  ஆலோசிப்பதற்காக

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற எம்பிக்கள் குழுவில்  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த நாடாளுமன்ற எம்பிக்கள்  குழுவில் அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ஐக்கிய மக்கள் சக்தியின்  செயலாளர் நாயகத்தை எவ்வாறு நியமிப்பது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்,   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

 ரஞ்சித் மத்துமபண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்பதை நீதிமன்றம் கூட ஏற்றுக் கொண்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி