கொழும்பு பெருநகரில் வெள்ளம் ஏற்படுவதற்கான
அடிப்படைக் காரணங்களை ஆராய நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கை பெற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பொறுப்பு கொழும்பு மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க இது தொடர்பான பரிந்துரைகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளன.
கொலன்னாவ பிரதேச செயலகத்துக்கு விரிவான அபிவிருத்தி திட்டத்தை உருவாக்குதல், கொலன்னாவ நகரத்தை மறுசீரமைத்தல் மற்றும் காணிப் பயன்பாட்டை மேம்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளவும் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.-