கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து
செல்லும் பிரதான நீர் விநியோக பாதையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் கொழும்பு மற்றும் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மேலும், சில பகுதிகளில் குழாய்கள் மூலம் அசுத்த நீர் பெறப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
கலகெதர, பாதுக்க, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பலன்வத்த, மத்தேகொட, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பப்பிலியான ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.