வெள்ள ஆபத்து காணப்பட்டாதவை என இனங்காணப்பட்டுள்ள
மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளை (05) முதல் ஆரம்பிக்குமாறு, மேல் மாகாண பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநரினால், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (05) மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.