கேகாலை, மங்களகம, குருந்திய வராஹேன
கிராமத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் மண்மேட்டில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.கேகாலை,
மங்களகம, குருந்திய வராஹேன கிராமத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் மண்மேட்டில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கவிந்து ஷெஹந்தா என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
வீட்டின் பின்புறம் பாதுகாப்புச் சுவரை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டப்பட்டிருந்ததாகவும்,அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோதே சிறுவன் மீது மண்மேடு வீழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவன் உயிரிழந்துள்ளான்.