வேகட வைத்தியசாலைக்குள் புகுந்த
இனந்தெரியாத நபர் ஒருவர், அங்கு கடமையிலிருந்த பெண் வைத்தியரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி சுமார் 1,80,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் வைத்தியரின் அறைக்குள் நுழைந்த சந்தேக நபர், சிகிச்சைக்காக வந்த நோயாளிபோல் நடித்துள்ளார்.
பின்னர் அவர் துப்பாக்கியை காட்டி, பெண் வைத்தியரை பயமுறுத்தி, வைத்தியர் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.