ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற
உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தாக்குதலில் தனது தந்தையின் கால் முறிந்துள்ளதாகக் கூறி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்க்ஷவின் மகன் நேற்று (04) கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, தாம் எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்க்ஷ ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தாக்குதலாக மாறியுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் குணதிலக்க ராஜபக்க்ஷவின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்தையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தைக்கு காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்