ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல்
தொகுதியின் ஏற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்று (04) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.