ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்க்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ராஜபக்க்ஷவிடம் கோட்டை பொலிஸ் அதிகாரிகள் குழு ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
அதன் பின்னர், மோதல் இடம்பெற்ற ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சென்ற பொலிஸ் குழுவினர், அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் முடிவடைந்து வெளியில் வரும்போது மஹிந்தானந்த அளுத்கமகே தம்மை எட்டி உதைத்ததாக குணதிலக ராஜபக்க்ஷ பொலிஸ் விசாரணையின்போது கூறியதாக தெரியவந்துள்ளது.