எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன்
இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்துவதற்கு அநுரகுமார திஸாநாயக்க தயார் என தேசிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று அவர் கூறுகிறார்.
இன்றைய தினத்தின் பின்னர் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் விவாதம் நடத்தப்படும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.