'ஹிரு' தொலைக்காட்சியில் கடந்த
திங்கட்கிழமை ஒளிபரப்பான (03) 'சலகுன' நேரலை நிகழ்ச்சியில், பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எதிராக பாரிய குற்றங்களை சுமத்தினார்.'
மே 9, 2022 அன்று நாட்டில் எழுந்த கிளர்ச்சி சூழ்நிலையின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். .
இராணுவமும் பொலிஸாரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. பல வீடுகள் தீப்பிடித்து எரியும்போது இராணுவமும் பொலிஸாரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அவர் நிகழ்ச்சியில் பலமுறை வலியுறுத்தினார்.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் விவகாரங்கள் குறித்து ஆராய குழுவொன்றை நியமிப்பதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க கர்ணாகொட குழு நியமிக்கப்பட்டதாகவும், இருப்பினும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.