பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட கல்முனை
தொகுதி வலய அமைப்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பேரிம்பராசா மனோ ரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி பாண்டிருப்பு 6 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு 10 ஆம் வட்டாரம் நீலாவணை 1 ஆம் வட்டாரம் கல்முனை 11 ஆம் வட்டாரம் ஆகிய 4 வலயத்துக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வைத்துகடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறித்த நியமனக் கடிதத்தை கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்தனர்.