மத்திய காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள்
தங்கியுள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. .
இந்தச் சம்பவம் இன்று (06) அதிகாலை இடம்பெற்றதாகவும் இதன்போது 23 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவரால் நடத்தப்படும் அல்-சார்டி பாடசாலையே தாக்கப்பட்டதாக சாட்சிகளும் மருத்துவமனை அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் வடக்கு காசாவில் குண்டுவீச்சுகளில் இருந்து தப்பி ஓடிய பாலஸ்தீனியர்களால் குறித்த பாடசாலை நிரம்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த பாடசாலையில் ஹமாஸ் போராட்க்காரர்கன் செயற்படுவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.