ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த கார்
ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் வீழந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காசல்ரி நீர்த்தேக்கத்துக்கு அருகில் வீழ்ந்த இந்தக் காரிலிருந்த பெண் ஒருவரே காயமடைந்து டிக் ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் நியூவெலிகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதிக்கு சென்று திரும்பிய கார், எதிர்திசையில் வந்த பஸ்ஸுக்கு வழிவிட முற்பட்டபோது, கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.