பாதுக்க பிரதேசத்தில் ஹங்வெல்ல பஸ் நடத்துனரிடம்
கப்பம் கோரிய நபர் ஒருவர், நடத்துனரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் நான்கு இடங்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதுக்க வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேக நபர் துன்னானை பகுதியில் பஸ்ஸில் ஏறியதும், நடத்துனரிடம் 2 ஆயிரம் ரூபா பணம் கேட்டுள்ளார்.
நடத்துனர் பணம் வழங்க மறுத்ததையடுத்து, பஸ்ஸை சேதப்படுடத்தியதுடன் நடத்துனரையும் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துளள்து.