1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

காஸா பகுதியில் ஹமாஸ்

போராளிகளிடம் பிணைக் கைதிகளாக இருந்த தமது நாட்டு பிரஜைகள்  நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது.

மத்திய காசா பகுதியில் இராணுவ நடவடிக்கையின்போதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட நால்வரும் 21, 25, 27 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் போராளிகள் இவர்களை இரண்டு கட்டிடங்களில் பிடித்து வைத்திருந்தனர். இஸ்ரேல் படைகள் அவர்களைச் சுற்றிவளைத்து அவர்களைக் கொன்ற பின்னர் நால்வரையும் மீட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் பாலஸ்தீன குழந்தைகள், பெண்கள் உட்பட 55 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி