1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிறைச்சாலையில்  தடுத்து

வைக்கப்பட்டுள்ள  குக்குல் சமிந்த என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று (08) மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறைச்சாலைக்குள் கைதிகள் குழுவினால் இந்தச் சந்தேக நபர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் அறிக்கை ஒன்றை கோரியுள்ள நிலையில், சந்தேக நபர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளால் தாக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரியினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி