வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை
ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சிகிச்சைக்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலபே ராகுல் வித்தியாலயத்திலிருந்து ரந்தம்பே நோக்கி சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வரக்காபொல பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் இந்த பஸ் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.