கொலன்னாவ நகரை தற்போதைய
இடத்திலிருந்து அகற்றி அதே பகுதியில் மேடான இடத்தில் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய நகரத் திட்டத்தின் கீழ், தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள், வணிக வளாகங்கள் போன்றவை உயரமான இடங்களில் அமைக்கப்படவுள்ளன. அதே
அத்துடன், கொலன்னாவையின் புதிய நகரத் திட்டத்தின் பிரகாரம், அனுமதியற்ற கட்டுமானங்களைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இத்திட்டத்தின் பிரகாரம் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பும் தயாரிக்கப்பட உள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்களில் ஜனாதிபதியின் செயலகத்தில் பிரதானி சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் பிரேமநாத் சி.தொலவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.