கண்டியில் உள்ள நன்னடத்தை திணைக்களத்துக்குச் சொந்தமான
சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் சிறுமிகளை விபசார நடவடிக்கைகளுக்காக பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்த சிறுவர் தடுப்பு நிலைய கண்காணிப்பாளர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி வெரலவத்தை பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றின் கண்காணிப்பாளரிடமே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் இந்த முகாமில் நீதிமன்ற உத்தரவுப்படி இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமிகள் முகாமுக்குள் விபசாரத்துக்காக பல்வேறு நபர்களுக்கு கண்காணிப்பாளரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
மடத்துகம பொலிஸ் நிலையத்தில் வசிக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.