1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில்

கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும்  வர்த்ததக நிலையம்  ஒன்றின்  உரிமையாளர்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (09) இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகராவார்.

இந்த நபர் கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளராவார்.  இவர் நேற்று இரவு முதல் மாடியில் இருந்து தரை தளத்துக்கு வந்தபோது  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தத் துப்பாக்கிச் சூடு கொலையா அல்லது தற்கொலையா என வெளியாகவில்லை என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி