தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தமை
தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹர்ஷ டி சில்வாவின் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷத சில்வா நாடாளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது.
இந்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் திணைக்களம் அறிவித்த நிலையிலேயே விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தார்.