மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற
முச்சக்கரவண்டியும் தம்புள்ளையிலிருந்து வந்த காரும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் பின்னர் முச்சக்கர வண்டி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாவுல - அரங்கல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரின் சாரதி நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜி.எம்.விமலரத்ன (65) மற்றும் ஹீனா கமகெதர சோமாவதி (76) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.