மொட்டுக் கட்சியின் பசில்
ராஜபக்க்ஷவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான கூட்டணியை உருவாக்குவதற்காக ராஜபக்ஷக்களுடன் மற்றும் நாட்டின் வங்குரோத்து நிலைக்குக் காரணமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“இந்த நாட்டை காலியாக்க நினைக்கும் எவருடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். ஐக்கிய குடியரசு முன்னணியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை பெப்ரவரி 14ஆம் தேதி முன்வைத்தோம்.
எங்கள் நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாட அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்தோம். ஆனால் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ, கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகியோரை அழைக்கவில்லை்
மக்கள் விடுதலை முன்னணியையும் நாம் அழைத்தோம். ஆனால் அவர்கள் எங்களுடன் கலந்துரையாட மறுத்துவிட்டனர்.
எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணியை தலைமைத்துவ சபை கட்டுப்படுத்தும் எனவும் அதன்படி பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படும் வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
"அந்த வேட்பாளர் பதவிக்கு நான் முன்மொழியப்பட்டால், நான் போட்டியிடுவேன்." என மேலும் தெரிவித்துள்ளார்.