யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை
மேற்கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று (11) இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்ததனையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் நிகழ்கால பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக மக்கள் முகம்கொடுத்து வருகின்ற சிக்கல்கள் குறித்தும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் தேவை குறித்தும் இதன்போது ஆழமாக கலந்துரையாடப்பட்டது.