1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொலைச் சம்பவம் ஒன்று

இடம்பெற்று சில நாட்களின் பின்னர், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றொவருடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தனது மனைவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்து பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்றதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து இவர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
 
தலங்கம உத்யான மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்த தாருக நதிகுமாரி (31) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த பெண் தனது கணவருடன் தலங்கம உத்யான மாவத்தை பகுதியில்  வசித்து வந்துள்ளதுடன் கணவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததால் இருவருக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
இதனிடையே அவரது நண்பர் ஒருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரும் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதால் வாக்குவாதம் வலுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இதற்கிடையில் நேற்று  முன்தினம் (10 ) மாலை தனது  கணவர் நண்பருடன் வீட்டுக்கு வந்தபோது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கணவரின்
நண்பரும் பெண்ணுடன் தகராறு செய்துள்ளார். 
 
பின்னர், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து பெண்ணின் தலை, கழுத்து மற்றும் பல இடங்களில் தாக்கிப் பலத்த காயம் ஏற்படுத்திய பின்னர் கணவரும் நண்பரும் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு ஹிங்குராக்கொட பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளார்.
 
பெண் கொல்லப்பட்டதை அறிந்து அச்சமடைந்த  இருவரும் தலங்கம பொலிஸ்  குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் பரிசோதகர் லக்க்ஷிதாவைச் சந்தித்து, பொய்யான முறைப்பாடு செய்துள்ளனர்.
 
பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, கணவர் மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை நடத்திய பின்னர், அவர்கள் அளித்த முரண்பாடான வாக்குமூலங்களில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி