பாறுக் ஷிஹான்
இரு பாடசாலை மாணவிகள் காணாமல்போன சம்பவம்
தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தபோது, அவர்கள் இருவரும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 14 மற்றும் 16 வயதான இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்..
இரு மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் கடந்த 10 ஆந் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் உறவினர்களின் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.