1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில்

உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயனக் கசிவினல் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றில் கலவை தயாரிக்கும்போது இரசாயனப் பொருளில் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 
நோய்வாய்ப்பட்டவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் தனிப்பட்ட சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி