1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை

ஒத்திவைக்க முடியாது எனவும் இவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி முடிவாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நேற்று (11) பதுளையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

“இப்போது நாட்டு மக்கள் எங்கள் கட்சி மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அன்று இருந்ததை விட இன்று பலமாக உள்ளோம்.

தேர்தல் இல்லாமல் இருக்க முடியாது. அரசியலமைப்பின்படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி இப்படி ஒரு முட்டாள்தனமான செயலை செய்யும் என்று நான் நினைக்கவில்லை.."

"ஐக்கிய தேசியக் கட்சி அப்படிச் செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும்."

நமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை. அதனை சரியான நேரத்தில் கூறுவோம். மக்கள் இப்போது எம்மை வெற்றி பெறச் செய்யக காத்திருக்கிறார்கள் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி