கெக்கிராவ கல்வி வலயத்துக்கு
உட்பட்ட ஆரம்ப பாடசாலை ஒன்றின் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 5 வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாவர்.
இதேவேளை குளவி தாக்குதலின் போது, மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.