1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்

தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை, தேசிய புலனாய்வு பிரதானி  மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.   

இந்தக் குழு, இந்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள், வவுணதீவு கொலை விவகாரத்துடன் புலிகள்  தொடர்புபட்டிருந்தாக இராணுவ புலனாய்வு பிரிவு அறிவித்தமை தொடர்பிலும் விசாரணை நடத்தவுள்ளது.  
 
இக்குழுவின் அறிக்கையை செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றுத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி