சிறுமி ஒருவரை கொடூரமாக
தாக்கிய குறித்த சிறுமியின் தந்தை எனக் கூறப்படும் குகுல் சமிந்த என்பவர் சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் இன்று (12) பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, 5 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியில் சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து, தாக்குதல் நடத்திய குகுல் சமிந்தவும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த சன்மானம் வழங்கி வைக்கப்பட்டது.
தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞரே கௌரவிக்கப்பட்டுள்ளார்.