ஒன்பது வயது பாடசாலை மாணவியை
கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் சிறுமியின் மாற்றாந்தந்தை எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.