பாணந்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில்
தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.
பாணந்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளது.
ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டு அருகிலிருந்த சமிக்ஞை கட்டமைப்பில் மோதியதால் அந்தக் கட்மைப்பும் முற்றிலும் செயலிழந்தது.
தண்டவாளத்தை சீரமைக்க தாமதமாகும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.