கடந்த காலங்களில் வன்முறை அரசியல் நடவடிக்கைகளில்
ஈடுபட்ட அரசியல் குழுக்கள் மீண்டும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என நம்ப முடியாது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (13) காலை பிட்கோடடேயிலுள்ள உள்ள தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் புனர்வாழ்வை வழங்கியது. கிளர்ச்சி இத்துடன் முடிவடையும் என அனைவரும் நினைத்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக 1989 இல் மீண்டும் இந்த வன்முறைகள் இலங்கையில் இடம்பெற்று உடைமைகளும் உயிர்களும் அழிக்கப்பட்டன.
அதன் பின்னரும் துரதிர்ஷ்டவசமாக, 2022 ஆம் ஆண்டு மே 9 அன்று, ஒரே இரவில் 91 வீடுகளை அழிக்கும் அளவுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.