1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜூலை முதல் விதிமுறைகளை

கடுமையாக்க  அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கி மாணவர் வீசா பெறும் வாய்ப்பு இனி இழக்கப்படும்.
 
போர் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி செழிப்பைத் தேடி பணக்கார நாடுகளில் தஞ்சமடைகிறார்கள், அதே நேரத்தில் ஏராளமான மக்கள் வெற்றிகரமான எதிர்கால நம்பிக்கையுடன் வளர்ந்த நாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை நாடுகின்றனர்.
 
எனினும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் நாட்டுக்குள் நுழைவது தற்போது உலகின் வளர்ந்த நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
 
இத்தகைய பின்னணியில், உயர்கல்விக்காக வளர்ந்த நாடுகளுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 
அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த ஆண்டு தனது விசா விதிகளை கடுமையாக்கும் திட்டங்களை அறிவித்தது. மற்றும் 2025 க்குள் நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயித்தது.
 
அவர்களின் கவனம் மாணவர் விசா குறைப்பில் இருந்தது.
 
இதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து தங்கி மாணவர் வீசா பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை இடைநிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
 
மேலும், தற்காலிக பட்டதாரி விசாவில் நாட்டில் தங்கியிருக்கும் பட்டதாரிகள், மேலதிக கல்விக்கான விசாவுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை மீண்டும் இழக்க நேரிடும்.
 
நாட்டின் உள்விவகாரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி வரை, சுற்றுலா விசாவில் வந்து மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஐ தாண்டும்.
 
அதிகாரிகளின் கூற்றுப்படி, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பது 2022/23 இல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
 
இது நாட்டின் மாணவர் விசா நடைமுறையை சீர்குலைப்பதாகவும் உயர்கல்வி பெறும் உண்மையான நோக்கத்துடன் நாட்டுக்கு வரும் மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும்  அவுஸ்திரேலிய அரசு கூறுகிறது.
 
நாட்டில் தங்கியிருக்கும் காலத்தை நீடிக்க வேண்டியதன் காரணமாக இலாபகரமான கற்கைநெறிகளை பயிலும் நபர்களை இது ஒதுக்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
பட்டதாரிகள் தங்கள் திறமைக்கு ஏற்ற வேலையைக் கண்டுபிடித்து அதன் கீழ் நிரந்தர வதிவிட விசாவைப் பெற வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
 
இல்லையேல் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கருத்தாகும்.
 
மேலும், தற்காலிக பட்டதாரி விசாவின் கீழ் பட்டப்படிப்புக்குப் பின்னர் பணிபுரியும் நேரத்தைக் குறைக்கவும், விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 50 முதல் 35 ஆகக் குறைக்கவும், ஆங்கில மொழித் திறனை உயர்த்தவும் அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி