நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி சாமரி வீரசூரிய இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
சரத் ஏக்கநாயக்க, கீர்த்தி உடவத்த மற்றும் விஜயதாச ராஜபக்க்ஷ ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தடை உத்தரவுக்கு எதிரான தரப்பினரின் ஆட்சேபனைகள் மற்றும் பதில்களை ஜூலை 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.