கண்டி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில்
இரண்டு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு மாணவன் மற்றைய மாணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் 16 வயதுடைய மாணவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு மாணவர்களுக்கிடையிலான மோதல் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதுடன்,மோதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.