கம்பஹா மாவட்டத்தின் பல
பகுதிகளுக்கு நாளை (23) நண்பகல் வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குடிநீர் குழாய் திடீரென உடைந்ததே இதற்கு காரணம்.
இதன்படி, வத்தளை, மாபோல, ஜா - எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் வத்தளை, பயகம, மஹர, ஜா அல, கட்டான மற்றும் மினுவாங்கொட உள்ளூராட்சி சபை பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும்.
மேலும், உயரமான இடங்களுக்கு தண்ணீர் விநியோகம் தடைப்படும் என சபை தெரிவித்துள்ளது்
இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.