சட்டமா அதிபரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின்
சேவைக் காலத்தை 6 மாத காலத்துக்கு நீடிக்குமாறு அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி விடுத்திருந்த பரிந்துரை இன்று (18) நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த பரிந்துரைக்கு கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்தய யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியபோதே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் சேவையை நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையை பரிசீலிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கூடியிருந்த போதிலும், இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியவில்லை.
இந்நிலையில், சட்டமா அதிபர் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.