1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு டி .எஸ்.சேனநாயக்க

கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான நிகழ்வொன்றை ஜூலை 8ஆம் திகதி நடத்தவிடாமல் தடுத்ததாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீது பிரபல கல்வியாளர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் பேராசிரியர் குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சாந்திருப்பதாகக் கூறி, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலிருக்க அமைச்சர் தலையிட்டார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Gomika 2024.06.09

தேசிய மக்கள் சக்தியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்குவதில் அவர் ஒரு முன்னோடி நபராக இருந்து வருகிறார்.

தமிழ் லீடருக்கு கிடைத்த செய்திகளின்படி, ஜூன் 25 அன்று நடைபெற்ற ஈ.டபிள்யூ. அதிகாரம்-ஆர்.ஐ.டி. அல்லஸ் நினைவு தின நிகழ்வுகளில் கொழும்பு அனுலா வித்தியாலய அதிபருடன், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை விருந்தினராக கலந்து கொள்ள அமைச்சர் அனுமதித்துள்ளார்.

Gammanpila 2024.07.09

இந்நிலையில்,பேராசிரியர் உடுகமசூரிய கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியை அமைச்சர் எவ்வாறு அரசியலாக்க முடியும் என பாடசாலையின் பழைய மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களை நடத்துவதை அமைச்சர் பொறுத்துக் கொள்கிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி