இன்று10ஆம் திகதி வழங்கப்பட
வேண்டிய ஓய்வூதிய கொடுப்பனவு நேற்று (09) வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 24 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் தபால் திணைக்களத்துக்கும் 28.5 பில்லியன் ரூபா பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 995 சத வீதமான மக்களுக்கு எவ்வித தாமதமும் இன்றி ஜுலை 10ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கவுள்ளதுடன், பிரதேச செயலக அலுவலகங்கள் ஜூலை 8, 9ஆம் திகதிகளில் தமது கடமைகளை மேற்கொள்ளாததால், சுமார் 13,000 பேரில் வெகு சிலரே ஓய்வூதிய கொடுப்பனவை நாளை 11ஆம் திகதி பெறுவர் என்றும் தெரிவித்துள்ளார்.