ரயில் சேவை பணிப்புறக்கணிப்பில்
ஈடுபட்டுள்ள அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாளர்கள் இன்று (10) மணிக்கு 12 மணிக்குள் அந்தந்த ரயில் நிலையம் அல்லது அருகில் உள்ள ரயில் நிலையத்தில் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளத
இலங்கை ரயில்வே திணைக்களம் அத்தியாவசிய சேவைகளைவழங்கி வருகின்ற போதிலும் இந்த பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அகில இலங்கை பிரதி நிலைய அதிபர் ஒன்றியமும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் ரயில்வே திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.