அதுருகிரி நகரில் பச்சை குத்தும்
நிலையம் ஒன்றில் இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்டுத்தப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்தனர்.